மதுரைக்காரத்தம்பி
பார்த்தது,படித்தது,ரசித்தது,கேட்டது,எண்ணத்தில் உதித்தது என எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்கிறேன்.
வெள்ளி, 22 மே, 2009
குடும்பத்துல சந்தோசம் வேணுமா ?
புதன், 20 மே, 2009
விடுதலை புலிகளின் வீழ்ச்சி - முடிவு அல்ல
சரி, விடுதலைப் புலிகள் இயக்கம் , வீழ்ச்சியை காண காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
35 வருடங்கள் தமிழர்கள் மற்றும் தமிழ் ஈழத்திற்காக, பல ஆயுதப் போராட்டங்களை நடத்திய இந்த இயக்கம், அதன் லட்சியத்தை அடையாமல் போரிலிருந்து விலகி உள்ளது. இது தற்காலிகம் என்று நினைக்கிறேன்.
மிக முக்கியக் காரணமாக, May 21, 1991 அன்று இந்திய முன்னால் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களை ஒரு தேர்தல் கூட்டத்தில் தற்கொலைப் படையின் மூலம் கொலை செய்தது தான். (ஒரு இந்தியனாக என்னால் இதை மறக்க மற்றும் மன்னிக்க முடியவில்லை) இவ்வரலாற்றுப் பிழையை இவ்வமைப்பு செய்யாதிருந்தால் ஒரு வேளை தமிழ் ஈழம் கை கூடி இருக்கும். ஒரு இந்திய தலைவரை, முன்னால் பிரதமரை, இந்திய மண்ணில் கொலை செய்ததன் மூலம் இவ்வியக்கத்திற்கு கிடைத்து வந்த இந்தியாவின் அதரவு திரும்பப் பெற்றுகொள்ளபட்டது. (நான் பள்ளி மாணவனாக இருந்த காலங்களில் இலங்கை தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வெளிப்படையான அதரவு தமிழ் நாட்டில் இருந்தது. உண்ணா விரதங்கள், மறியல் போராட்டங்கள், அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்தனே கொடும்பாவி எரிப்பு என்று தமிழகமே அல்லலோகப்பட்டது.)
புதன், 13 மே, 2009
மதுரைக்காரத்தம்பியின் தேர்தல் கண்ணோட்டம்
- பிராந்தியக் கட்சிகளும், பிராந்தியப் பிரச்சினைகளும்.
- வாக்காளர்களின் மனப்போக்கு. என் ஒருவனால் என்னவகிவிடப் போகிறது என்கிற மனப்பான்மை. (எல்லாவித ஊடகங்களும் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை விளம்பரப்படுத்தியும் இது வரை 50% முதல் 52% வாக்குகளே பதிவாகி உள்ளன. 50% இந்தியர்கள் சனநாயகக் கடைமையை அற்ற விரும்பவில்லை என்பது தெளிவுப்படுதுகிறது.)
காங்கிரஸ்,பா.ஜ.க மற்றும் மூன்றாவது அணி ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. Magic நம்பர் என்று அழைக்கப்படும் 180 சீட்டுகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கிறதோ அந்தக் கட்சி, தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது மற்றும் நான்காவது அணிகளில் உள்ளக் கட்சிகளை தன்னுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு ஆட்சி அமைக்க முற்படும். இதை நிருபிக்கும் விதமாக இப்போதே கட்சிகள் கூட்டணித் தாவல்களை அரங்கேற்றி வருகின்றன. தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி என்கிற ஆந்திரக் கட்சி, பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்து பிள்ளையார் சுழி. தேர்தல் முடிவுகளை பொறுத்து இந்தத் தாவல்கள் இன்னும் அதிகமாக அரங்கேறும்.
கடந்த ஆட்சியில் இருந்த சில அமைச்சர்களுக்கு இந்தத் தேர்தல் சாதகமாக இல்லை. லாலு யாதவ் இந்த முறை அமைச்சர் ஆவது அவ்வளவு சுலபம் இல்லை. மக்கள் அதரவு அவருக்கு இம்முறை பீகாரில் இல்லை என்பது அவருக்கு விளங்கிவிட்டது. ஆந்திராவில் சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் காரணமாக யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கு என்பது Suspense ஆக உள்ளது. காங்கிரசுக்கு இம்முறை மாநில அட்சி என்பது கஷ்டம் தான்.
தமிழகத்தில் விஜயகாந்தின் வாக்குப்பிரிப்பு வேலை இந்த தேர்தலிலும் தொடரும். தி.மு.க அதிக இடங்களை பெற முடியாத பொழுது காங்கிரஸ் தி.மு.க-வை கை கழுவிவிடும் சத்திய கூறுகள் அதிகம் உள்ளது. ஆ.தி.மு.க - உடன் கை கோர்க்க காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரண்டும் முயற்சி செய்யும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், ஆ.தி.மு.க தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை எந்தக் கட்சி கலைக்க ஒத்துக்கொள்கிறதோ அக்கட்சியுடன் கூட்டு சேரும். பா.ஜ.க சட்டப்பிரிவு 365 பயன்படுத்த தயங்கும். இதற்கு அந்தக் கட்சியின் கடந்த கால அனுபவங்களின் விளைவு ஆகும். இந்த சட்டப்பிரிவினால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க தான். எனவே, ஆ.தி.மு.க முதலில் பா.ஜ.க-உடன் கூட்டணி வைத்தால் ஆட்சி அதிக நாள் தாங்காது.
ஒருவேளை ஆ.தி.மு.க காங்கிரசுக்கு அதரவு என்ற நிலை எடுத்தால் ஆட்சியை கைப்பற்றிக் கொள்ள காங்கிரஸ் ஆ.தி.மு.க-வின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளும்.
சரி, காங்கிரஸ்,பா.ஜ.க அல்லாமல் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் என்னவாகும். தொண்ணுறுகளில் நடந்த கூத்தே திரும்ப அரங்கேறும். வழக்கம் போல் பா.ஜ.க எதிர்க்கட்சி வரிசையில் அமரும். காங்கிரஸ் வெளியில் இருந்து அதரவு என்று அறிவிக்கும். பிறகு ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் அதன் வேலையை ஆரம்பித்துவிடும்.
எல்லாம் சரி, மூன்றாவது அணியில் யார் பிரதமர் என்ற கேள்வியை மட்டும் கேட்காதீர்கள். அதற்கு விடை அவர்களுக்கும் தெரியாது, அந்த ஆண்டவனுக்கும் தெரியாது.
கண்ணோட்டத்தின் நிறை குறைகளை, பின்னோட்டமிடுங்கள். வாக்குகளை நியூஸ் பானை மற்றும் "tamilish.காம்"-இலும் அளியுங்கள். நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
புதன், 6 மே, 2009
நேபாளம் - ஒரு புதிய இந்திய சிக்கல்
ஆனால், தற்போது சனநாயகம் ஆட்டம் கண்டுகொண்டு இருக்கிறது. இராணுவ தளபதியின் பதவி நீக்க உத்தரவை பிரதமர் திரு புஷ்பா கமல் தால் உத்தரவிட, அந்த உத்தரவை நிராகரித்துவிட்டார் நேபாள ஜனாதிபதி
இதையடுத்து பிரதமர் பதவி விலகி விட்டார். Maoist-கள் தற்போது நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலை, இந்தியா மற்றும் இந்தியத் தூதரால் தான் என்று பகிரங்கமாக குற்றஞ் சாட்டியுள்ளனர்.
இதை இந்தியா மறுத்துள்ள போதிலும் நேபாள மக்களிடையே இந்தக் கருத்து ஆணித்தரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அங்கு வெளியாகும் நாளிதழ்களே சாட்சி.
இது தொடரும் பட்சத்தில், இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் வரிசையில் நேபாளமும் சேர்ந்து தலை வழியை கொடுக்கும். இந்திய வெளி உறவுத் துறை என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.