புதன், 13 மே, 2009

மதுரைக்காரத்தம்பியின் தேர்தல் கண்ணோட்டம்



கடந்த இரண்டு மாதங்களாக நடந்தத் தேர்தல் திருவிழா வருகின்ற வெள்ளிக்கிழைமையுடன் (16.05.2009) முடியப்போகிறது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் சாதகம் இல்லாத சூழல் நிலவுவதால் யார் அரியணை ஏறுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளதால் அனைத்து கட்சிகளும் "த்ரில்லர்" படம் பார்த்த ரசிகர்கள் போல் உள்ளது.


எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு நான்காவது அணி, ஐந்தாவது அணி என்று கூட்டணி அமைத்து போட்டி போடும் கூத்து இபொழுதுதான் நடந்து வருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது தேர்தலுக்கு முன்பே தெரிந்த விஷயம். இதற்கு இரண்டு மிக முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன.



  1. பிராந்தியக் கட்சிகளும், பிராந்தியப் பிரச்சினைகளும்.

  2. வாக்காளர்களின் மனப்போக்கு. என் ஒருவனால் என்னவகிவிடப் போகிறது என்கிற மனப்பான்மை. (எல்லாவித ஊடகங்களும் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை விளம்பரப்படுத்தியும் இது வரை 50% முதல் 52% வாக்குகளே பதிவாகி உள்ளன. 50% இந்தியர்கள் சனநாயகக் கடைமையை அற்ற விரும்பவில்லை என்பது தெளிவுப்படுதுகிறது.)

காங்கிரஸ்,பா.. மற்றும் மூன்றாவது அணி ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. Magic நம்பர் என்று அழைக்கப்படும் 180 சீட்டுகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கிறதோ அந்தக் கட்சி, தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது மற்றும் நான்காவது அணிகளில் உள்ளக் கட்சிகளை தன்னுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு ஆட்சி அமைக்க முற்படும். இதை நிருபிக்கும் விதமாக இப்போதே கட்சிகள் கூட்டணித் தாவல்களை அரங்கேற்றி வருகின்றன. தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி என்கிற ஆந்திரக் கட்சி, பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்து பிள்ளையார் சுழி. தேர்தல் முடிவுகளை பொறுத்து இந்தத் தாவல்கள் இன்னும் அதிகமாக அரங்கேறும்.


கடந்த ஆட்சியில் இருந்த சில அமைச்சர்களுக்கு இந்தத் தேர்தல் சாதகமாக இல்லை. லாலு யாதவ் இந்த முறை அமைச்சர் ஆவது அவ்வளவு சுலபம் இல்லை. மக்கள் அதரவு அவருக்கு இம்முறை பீகாரில் இல்லை என்பது அவருக்கு விளங்கிவிட்டது. ஆந்திராவில் சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் காரணமாக யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கு என்பது Suspense ஆக உள்ளது. காங்கிரசுக்கு இம்முறை மாநில அட்சி என்பது கஷ்டம் தான்.


தமிழகத்தில் விஜயகாந்தின் வாக்குப்பிரிப்பு வேலை இந்த தேர்தலிலும் தொடரும். தி.மு. அதிக இடங்களை பெற முடியாத பொழுது காங்கிரஸ் தி.மு.க-வை கை கழுவிவிடும் சத்திய கூறுகள் அதிகம் உள்ளது. .தி.மு. - உடன் கை கோர்க்க காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரண்டும் முயற்சி செய்யும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், ஆ.தி.மு.க தமிழகத்தில் தி.மு.க ஆட்சியை எந்தக் கட்சி கலைக்க ஒத்துக்கொள்கிறதோ அக்கட்சியுடன் கூட்டு சேரும். பா.ஜ.க சட்டப்பிரிவு 365 பயன்படுத்த தயங்கும். இதற்கு அந்தக் கட்சியின் கடந்த கால அனுபவங்களின் விளைவு ஆகும். இந்த சட்டப்பிரிவினால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க தான். எனவே, ஆ.தி.மு.க முதலில் பா.ஜ.க-உடன் கூட்டணி வைத்தால் ஆட்சி அதிக நாள் தாங்காது.


ஒருவேளை ஆ.தி.மு.க காங்கிரசுக்கு அதரவு என்ற நிலை எடுத்தால் ஆட்சியை கைப்பற்றிக் கொள்ள காங்கிரஸ் ஆ.தி.மு.க-வின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளும்.


சரி, காங்கிரஸ்,பா.ஜ.க அல்லாமல் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் என்னவாகும். தொண்ணுறுகளில் நடந்த கூத்தே திரும்ப அரங்கேறும். வழக்கம் போல் பா.ஜ.க எதிர்க்கட்சி வரிசையில் அமரும். காங்கிரஸ் வெளியில் இருந்து அதரவு என்று அறிவிக்கும். பிறகு ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் அதன் வேலையை ஆரம்பித்துவிடும்.


எல்லாம் சரி, மூன்றாவது அணியில் யார் பிரதமர் என்ற கேள்வியை மட்டும் கேட்காதீர்கள். அதற்கு விடை அவர்களுக்கும் தெரியாது, அந்த ஆண்டவனுக்கும் தெரியாது.


கண்ணோட்டத்தின் நிறை குறைகளை, பின்னோட்டமிடுங்கள். வாக்குகளை நியூஸ் பானை மற்றும் "tamilish.காம்"-இலும் அளியுங்கள். நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.



2 கருத்துகள்:

  1. மதுரக்கார மாமா,
    சுவிங் ஓட்டு ஆகாமல் இருந்தால் சரி..
    //நிறைய பதிவுகள் பதிய வாழ்த்துக்கள்!//

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கலையரசன் அவர்களே!!!
    மதுரைக்காரதம்பி

    பதிலளிநீக்கு