நேபாளம், இந்தியாவை ஒட்டியுள்ள ஒரு சிறிய நாடு. கத்மாண்டுவை தலைநகரமாய் கொண்டுள்ள இந்த நாடு சில வருடங்களுக்கு முன்பு வரை மன்னராட்சியின் கீழ் இருந்தது. இந்த மன்னரட்சியை எதிர்த்து தீவிரமாய் போராடிக்கொண்டிருந்தவர்கள் Maoist என்ற கம்யூனிச கொள்கை கொண்ட அமைப்பு. தற்போது நடக்கும் சனநாயக ஆட்சிக்கு முன்பு வரை தீவீரவாதப்பாதையில் இருந்தவர்கள் தற்போது சனநாயகத்தை தேர்ந்தெடுத்து தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியிலும் அமர்ந்தனர்.
ஆனால், தற்போது சனநாயகம் ஆட்டம் கண்டுகொண்டு இருக்கிறது. இராணுவ தளபதியின் பதவி நீக்க உத்தரவை பிரதமர் திரு புஷ்பா கமல் தால் உத்தரவிட, அந்த உத்தரவை நிராகரித்துவிட்டார் நேபாள ஜனாதிபதி
இதையடுத்து பிரதமர் பதவி விலகி விட்டார். Maoist-கள் தற்போது நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலை, இந்தியா மற்றும் இந்தியத் தூதரால் தான் என்று பகிரங்கமாக குற்றஞ் சாட்டியுள்ளனர்.
இதை இந்தியா மறுத்துள்ள போதிலும் நேபாள மக்களிடையே இந்தக் கருத்து ஆணித்தரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அங்கு வெளியாகும் நாளிதழ்களே சாட்சி.
இது தொடரும் பட்சத்தில், இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் வரிசையில் நேபாளமும் சேர்ந்து தலை வழியை கொடுக்கும். இந்திய வெளி உறவுத் துறை என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
This is my first effort towards blogging. Give me your support.
பதிலளிநீக்குthanks/Maduraikkarathambi